விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல்

🕔 April 7, 2021

எப். முபாரக் –

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

தம்பலகாமம் 96ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விகாராதிபதி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் 96 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள அக்ரபோதி விகாரைக்குதாம் சென்றபோது, குறித்த பிக்கு தம்மை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, பாதிக்கப்பட்ட 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள், பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்றிரவு (6) பிக்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்றைய தினம்(7) தம்பலாகாமம் பொலிஸார், கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்