தேசிய கல்வியற் கல்லூரி: புதிய பயிலுனர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை அட்டாளைச்சேனையில் நடைபெறும்

🕔 February 11, 2021

எம்.ஜே.எம். சஜீத்

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நடைபெறும் என அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.

இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வி மற்றும் கணக்கீடு ஆகிய பாடநெறிகளுக்கு 100 பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது.

இவர்களுக்கான கடிதங்கள் தனித்தனியாக விண்ணப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேர்முக பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் காலை 09 மணிக்கு சமூகமளிக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்குமைய கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்