அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

🕔 February 8, 2021

பொதுஜன பெரமுன கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச – ஊடகத்துக்குத் தெரிவித் கருத்துத் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும் அந்தக் கட்சியின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமத்துவத்துக்கு தற்போதைய தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரசன்ச பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்; “நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்சாவுக்கு பொதுஜன பெரமுன தொடர்பாக அறிக்கைகளை வெளியிட உரிமை இல்லை” என்று கூறியுள்ளார்.

எனவே, அவர் தனது கூற்றை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்