முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 December 17, 2020

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரையும், இன்றைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு, நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்