புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை

🕔 June 29, 2020

– அஸ்ரப் ஏ சமத் –

“ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. அன்று என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு எவ்வித அழுத்தங்கள்  வந்தாலும் அவா்கள் என்னுடன்தான் இருக்கின்றனா்.

அதனால் தொடா்ந்து புரியாணி, வட்டிலப்பம் கிடைத்து வந்தது. போகப்போக அது குறைந்துவிடுமோ என்றுதான் யோசிக்கிறேன்”.

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தெகிவளை சஹரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தலைமையில்  ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன  மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முஸ்லிம்  உறுப்பினர்கள், வேட்பாளா்கள்  கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

தொடா்ந்து அவா் அங்கு உரையாற்றுகையில்; 

“அன்று றிசாத் பதியுத்தீன் ‘சொப்பிங் பேக்’குடன் வடக்கில் இருந்து  வந்தார். இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வடக்கு கிழக்கில் அமைதியான சுழநிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம்.

அன்று மூதுாரில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் 02 மணித்தியாலங்களுக்குள் துரத்திவிட்டாா்கள். அன்று நாங்கள் முஸ்லிம்களிடம்  சொன்னோம் – ஒரு கிழமைக்குள் உங்களை மீள மூதூரில் குடியமாா்த்துவோம் என்று.  அதேமாதிரி புலிப் பயங்கரவாதிகளை  துரத்தி விட்டு, மீளவும்  மூதுாரில் முஸ்லிம்களை குடியமர்தினோம்.   

இப்பொழுது யாழ்ப்பாணம் தொடக்கம் ஹம்பாந்தோட்ட வரையிலான எந்தப் பிரதேசங்களுக்கும் மக்கள் எங்கும் அச்சமின்றி சென்று வரக்கூடிய சூழ்நிலையை நாங்கள்  ஏற்படுத்தினோம்.   

நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடன் சன்டையிடவில்லை. புலிப் பயங்கரவாதிகளுடன்தான் சண்டையிட்டு பயங்கரவாதத்தினை அழித்து நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தினோம்.

கடந்த கால நல்லாட்சியில் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. ஜனாதிபதி ஒரு பக்கமும், பிரதமர் ரணில் மறுபக்கமுமாக இழுத்தடிப்புக்கள்தான் நடைபெற்றன.

அதனால் நாட்டில்  மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை. 

இந்த நாட்டில் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றிவாகை சூடிய கட்சியில் இருந்துதான் என்னை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் ஏற்படுதல் வே்ண்டும் . 

கோட்டபாய உலகில் எங்குமில்லாதவாறு பாதுகாப்புப்படையினர், பொலிஸார்  மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த கொடிய கோரோனா பயங்கர  தொற்று நோயை வெற்றிகொண்டார்.

அது ஏனைய நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. 

அந்த கெடுபிடியான நேரத்தில்தான் கோரோனாவினல் இறந்த முஸ்லிம்களின் உடலை  புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற பிரச்சினை எழுந்தது. இவ்விடயத்தினை ரஊப் ஹக்கீம்தான் சாடிப்  பேசினாா். அதன் பின்னா் அலி சப்றி தலைமையில் சில முஸ்லிம் குழுவொன்று  இது பற்றி என்னைச் சந்தித்து பேசினார்கள்.  

அதனை நான் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும்  வைத்திய அதிகாரிகள்  விஞ்ஞானிகளைக் கூட்டி பேசினேன். அவா்களது தகவல் அறிக்கையின் படியே அது நடைபெற்றது. கொரோனாவினால் இறந்தவர்களை எரிக்குமாறு அவர்கள் கூறியிருந்தனர். அதனை மீறி  அரசியல் ரீதியாக  நாங்கள் அவ்விடயத்தில் கையடிக்கவில்லை.

கோரோனா பற்றி மிகவும் கட்டுபாடாக இருந்தமையில்தான்  நாம் தற்போது அந்நோயில் இருந்து தப்பியுள்ளோம். நேற்று முன்தினம்  காலிமுகத்திடலில் மக்கள் பழைய முறைப்படி நெரிசலாக நிரம்பி வழிந்திருந்தாா்கள். அவ்வாறு கூடுவதை தவிர்ந்து கொள்வது நல்லது. 

ஜனாதிபதியின் ஆட்சியில் 05 வருடங்களுக்குள்  நாட்டில் நல்லதொரு சமுதாயத்தினை கட்டியெழுப்பி சகலரும் வாழக்கூடிய நிலைமைக்கு கொண்டுவருதல் வேண்டும்.

ஆகவேதான் நமது எதிா்கால சிறாா்களுக்கு சிறந்த பிரஜைகளாக வருவதற்கு வழிவகுத்தல் வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவினை விடவும் கோட்டபாய ராஜபக்ஷ மிகவும் கடுமையானாவர். அவா் இந்த நாட்டினை சிறந்த நாடாக கொண்டு வருவார் என நம்புகின்றோம். 

எமது கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் 08 பேர் உள்ளனர். அவா்களது வெற்றிக்கு நீங்கள் இம்முறை கூடுதலாக உழைத்தல் வேண்டும்.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தேசிய பட்டியலில் உள்ளார். அவா் எம்முடன் இனைந்து நாட்டுக்காக சேவையாற்றுவார்” என்றார்.

முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அலி சப்றி, சுசில் பிரேம் ஜயந்த, காமினி லொக்குகே, பேராசிரியா் ஜீ.எல் பீரிஸ் ஆகியோரும் இங்கு உரைய்ற்றினார்கள்.

வடக்கு – கிழக்கு உட்பட பல்வேறு பிரதேச முஸ்லிம் உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை இதன்போது அலி சப்றியுடன் கலந்துரையாடினார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்