வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி

🕔 April 26, 2018

– க. கிஷாந்தன் –

லையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று வியாழக்கிழமை மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.

நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ளமை காரணமாக, நீர் வெளியேறி வீதிக்கு செல்வதனால் பிரதான வீதியினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் பாதைகளில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளமையினால், நகருக்கு வருகை தந்தோர் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்