செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்; ஆய்வாளர்களுக்குக் கிடைத்த ஆச்சரியம் தரும் புகைப்படம்

🕔 March 30, 2018

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மேய்வது போன்ற ஒரு காட்சி, விண்வெளி ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 02 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி பல்வேறு விதமான யூகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. இந்த நிலையில்; டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் அந்தப் படத்தைப் பார்த்து விட்டுக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் ‘செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கு இதுவே சாட்சி’ என்று ஒன்லைன் பத்திரிகை ஒன்றில் ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார்.

சமீபத்தில் கிடைக்கப்பெற்ற புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்திலுள்ளபிரமிட் போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது.

இது குறித்து வேற்றுகிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறும் போது; பண்டைய நாகரிகத்தினர்  கட்டிய பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளது. அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது. இந்த பிரமிட் – கார் அளவில் உள்ளது. ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம். இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்றனர்.

சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தை ஆராய்ந்த நிபுணர்கள்; செவ்வாய்கிரக பாறைகளில் மனித எலும்பு வடிவங்கள் படிந்து இருக்கிறது. அது சிறிய வடிவிலான தலை மற்றும் சிறிய அளவிலான உடல் பகுதி மற்றும் இரண்டு குழந்தைகளின் கைகள் போல் எலும்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதே போன்ற அமைப்புடன் மற்றொரு வடிவமும் காணப்படுகிறது. இது பல மீட்டர் நீளம் கொண்டது எனக் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

இது குறித்து கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்; “இது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராமாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

“இந்த படத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆராய்ந்தேன், பூமியில் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளை அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது.

இந்த படங்கள் அனைத்தும் குறைந்த ரிசுலேசன் கொண்டதாகும். இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகள் பார்க்க முடியும், ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள் நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்” எனவும் அவர் விபரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்