நீர் வழங்கல் அதிகார சபை பிரதித் தலைவராக சல்மான் நியமனம்; ஷபீக் ரஜாப்தீனின் இடத்தை நிரப்பினார்

🕔 January 24, 2018
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பதவியை வகித்து வந்த ஷபீக் ரஜாப்தீன், இன்று புதன்கிழமை ராஜினாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவராக சல்மானை நியமிக்கும் உத்தியோகபூர்வ கடிதத்தில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் இன்று பிற்பகல் கையொப்பமிட்டார்.

கிழக்கு மாகாண மக்களை கொச்சைப் படுத்தும் வகையில், ஷபீக் ரஜாப்தீன் பதிவொன்றினை பேஸ்புக்கில் இட்டமையினை அடுத்து ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பினை அடுத்து, அவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்