அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

🕔 January 24, 2018

ள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த தகவலை, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைில் மாற்றம் ஏற்படுத்தப்படுத்துவார் என்று, கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் கூறினார்.

இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து வருவதால், எந்தவொரு கட்சிக்கும் பிரச்சினை ஏற்படாத வகையில், அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்தப்படுமென அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்