அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார்.
கிரிபத்கொடயில் அமைந்துள்ள 80 பேர்ச் அளவான அரச காணியில் ஒரு பகுதியை, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
களனி பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த காலப் பகுதியிலேயே, இவ்வாறு அரச காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேற்படி காணியில் 02 பேர்ச் பரப்பளவுள்ள காணியை தனது உறவினர் ஒருவருக்கு இவர் விற்பனை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.