உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு

🕔 July 19, 2017

ள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு டிசம்பர் மாதத்தில் ஆயத்தமாக வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  செயற்குழுவுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏதேனும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறாவிட்டால், பெரும்பாலும் டிசம்பர் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியும்.

எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்நோக்க ஆயத்தமாக வேண்டும் என, தனது கட்சியின் செயற்குழுவிடம் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, புத்திசாதூரியமுடைய, படித்த வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் என்றும், 25 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் கட்சியின்  செயற்குழுக் கூட்டத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்