அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு

🕔 July 19, 2017

– பி. முஹாஜிரீன் –

ம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ், அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பதவியுயர்வுடனான நியமனக் கடிதத்தின் பிரகாரமும், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் நேற்று முன்தினம் திங்கள்கிழமை தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அம்பாறை மாவட்ட கச்சேரியில் நடைபெற்ற மேற்படி பதவியேற்பு நிகழ்வின்போது, ஓய்வுநிலை மாவட்ட விவசாயப் பணிப்பாளரான ஏ.ஆர்.ஏ. லத்தீப்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை விவசாய சேவை முதலாம் தர அதிகாரியான எம்.எஸ். அபுல் கலீஸ், இலங்கை விவசாயத் திணைக்களத்தின் மத்திய அரசின் விவசாய விரிவாக்க சேவையில் இணைந்து 1992 முதல் 2009 வரை உதவி விவசாயப் பணிப்பாளராகவும் 2009 முதல் 2017 வரை பிரதி விவசாயப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வெற்றிடத்துக்கு தகுதியான அதிகாரியொருவர் நியமிக்கப்படும்வரை, அவரே தொடர்ச்சியாக அந்தப் பணியினையும் நிறைவேற்றி வந்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்