வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

🕔 May 9, 2017

 

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயம், அம்பாறைக்கு இடம் மாற்றப்படவுள்ளதாக  பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று செவ்வாய்கிழமை காலை உறுதியளித்தார்.

அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த றிசாத்,  இந்தக் கிளைக்காரியாலயத்தை இடமாற்ற மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து, அம்பாறை முஸ்லிம் பிரதேச மக்கள் கவலைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான நிலை ஏற்பட்டால் அந்தப் பிரதேச மக்களுக்கு, தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் தொடர்பான  காரியங்களை நிறைவேற்றுவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான சூல்நிலை உருவாகுமென்றும் அமைச்சர் றிசாட் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இது தொடர்பில் கடிதமொன்றையும் அமைச்சர் றிஷாட் சமர்ப்பித்தார். இதனையடுத்து, விடயங்களை கேட்டறிந்த பின்னர் காரியாலயத்தை இடமாற்றப்போதில்லை என்ற உறுதி மொழியை அமைச்சர் சஜீத் வழங்கினார்.

இது தொடர்பில் ஏற்கனவே அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்து, கல்முனைக்கிளைக் காரியாலயம் இடம்மாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்