மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி

🕔 April 15, 2017

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குப்பைமேடு சரிந்ததில்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  17 பேரில் 10 பேர் மரணமடைந்துள்ளனர் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் மாணவர்களும்அடங்குகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், 100 வீடுகள் குப்பைக்குள் சிக்கிக்கொண்டன. எனினும், அங்குள்ள பலவீடுகளைச் சேர்தோர். இவ்வனர்த்தத்தின் போது, வீடுகளிலிருந்து ஓடி தப்பிவிட்டனர்.

மேற்படி குப்பை மேட்டுக்கு எதிராக பிரதேசவாசிகள், பல தடவை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், அவை தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்