கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0
– பழுலுல்லாஹ் பர்ஹான் – புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னைநாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கட்சியின் தலைமைச் செயலகம் சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரையுடைய மேற்படி கட்சியின் தலைமைச் செயலகத்தினை கருணா அம்மான் திறந்து வைத்தார். இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு