தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு
இலங்கையில் தாய் – சேய் மரணவீதம் குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனை ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதுவாகும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கர்ப்ப காலப்பகுதியில் அல்லது மகப்பேற்றின் பின்னரான 42 நாட்களுக்குள் அல்லது கர்ப்பிணிப் பெண்ணொருவருககு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பில் உயிரிழப்பது தாய்-சேய் மரணமாகக் கருதப்படுகின்றது.
நாட்டின் தாய்-சேய் மரணம் தொடர்பான ஆய்வு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
தாய் – சேய் மரணதில் பெரும்பாலானோர் குறைந்த வருமானத்தினைப் பெறும் குடும்பப்பின்னணியை கொண்டவர்களாவர். இயற்கையான நோய், இருதய நோய் உள்ளிட்ட பல காரணங்களால் தாய்-சேய் மரணங்கள் இடம்பெறுகின்றன.
வைத்திய ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காமையே இதற்கு காரணமாக விளங்குகின்றது.