அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில்
பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு, அடையாளம் தெரியாத கும்பலொன்று தீ வைத்தமையினால், 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (23) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவாவர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 02 வயது குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது. இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து தீயை அணைத்துள்ளனர்