ஏரிஎம் திருட்டு: வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

🕔 January 10, 2023

ங்கியொன்றின் ஏரிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கேரிய பிரஜைகள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் உட்பட 5 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேககம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 30 ஆம் திகதி காலி மாவட்டத்தின் பத்தேகம, கராபிட்டிய மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் உள்ள அரசாங்க வங்கியொன்றின் மூன்று ஏரிஎம் இயந்திரங்களில் வைப்பிலிடப்பட்டிருந்த கிட்டத்தட்ட 110 லட்சம் ரூபா பணம் திருடப்பட்டது.

இவற்றில் பத்தேகம ஏரிஎம் இல் மட்டும் 1,040 ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்