குருணாகல் மாநகர சபை மேயருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு ஆளுநர் உத்தரவு

🕔 November 11, 2022

குருநாகல் மாநகர சபையின் மேயருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொடவினால் 2022 நொவம்பர் 09 ஆம் திகதி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாநகர சபையின் மேயர் ஏதேனும் சட்டங்களை மீறியுள்ளாரா என்பதை கண்டறிய 03 மாத காலத்திற்குள் விசாரணை நடத்தப்பட உள்ளது.

வர்த்தமானியின் பிரகாரம், ஓய்வுபெற்ற நீதியரசர் லலிதா ஏக்கநாயக்க விசாரணைக்கு தலைமை தாங்குவார். தேவையான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்