ஐஸ் போதைப் பொருளுடன் அட்டாளைச்சேனையில் நபரொருவர் கைது

🕔 October 24, 2022

– பாறுக் ஷிஹான் –

ஸ் போதைப் பொருளுடன் அட்டாளைச்சேனை – ஆளங்குளம் வீதியில் வைத்து  சந்தேக நபர் ஒருவர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டார்.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, சந்தேக நபரை – விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைதான நபர் அட்டாளைச்சேனை 5ஆம் பிரிவைச் சேர்ந்த 73 வயது  மதிக்கத்தக்கவராவார். 

சந்தேக நபர் வசமிருந்து 9.88 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு, அவர் பாவித்த கைத்தொலைபேசியும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சான்றுப் பொருள்களுடன் அக்கரைப்பற்று  பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்