சஜித் பிரதமர் ஆகுவதற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு: தயாசிறி ஜயசேகர
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, சஜித் பிரேமதாஸ – பிரதமர் பதவியை ஏற்பாரென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணை அடுத்த வாரத்திற்குள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியிருந்தார்.