மருந்துகளுக்கு விலைகளை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக் கோரிக்கை

🕔 May 1, 2022

றுபது வகையான மருந்துகளுக்கு விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என, அரச மருந்தாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் அஜித் திலகரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின் ஊடாக தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் வெகுவாக பாதிப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தனியார் மருந்தகங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: 60 மருந்து வகைகளின் விலைகள், 40 வீதத்தால் அதிகரிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்