பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: கோட்டாவுக்கு மஹிந்த அறிவிப்பு

🕔 May 1, 2022

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று (01) காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு, பௌத்த பிக்குகள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கத் தயார் என, சில எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்