ஷெர்மிளாவுக்குப் பதிலாக புதியவர்: தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் மாற்றம்
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
திலக் பிரேமகாந்த இன்று கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், பிரேமகாந்த மேலதிக வனங்கள் பாதுகாப்பு ஜெனரலாக பணியாற்றினார்.
தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஷெர்மிளா ராஜபக்ச நேற்று அறிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானத்தின படி, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக ஷெர்மிளா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: விலங்கியல் பூங்கா பணிப்பாளர் ஷெர்மிலாவை, அமைச்சர் விமலவீர வார்த்தைகளால் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு