உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை

🕔 January 20, 2022

ரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை இடைநிறுத்த நேரிட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்ரே முக்கால் மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

.இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 10,000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதாக நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உறுதியளித்தபடி எரிபொருளை வழங்கினால் இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்