உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு

🕔 December 17, 2021

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆயினும் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பத்திரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்