டொக்டர் ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும்: முருத்தெட்டுவே தேரர்

🕔 December 17, 2021

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டொக்டர் எஸ்.எஸ்.எம். ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கடிதத்தை மீளப்பெற்று உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என, அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஷாபி விடயத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபியை மீண்டும் பணிக்கு அழைப்பதும் அவருக்கான கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கான முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மூலமாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நன்றி: வீரகேசரி இணையம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்