கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்: விரைவில் சட்டமும் வருகிறது

🕔 November 30, 2021

ஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேச மருத்துவத்துறை ராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (30) உரையாற்றும் போதே, அவர் இதனை கூறினார்.

எதிர்வரும் மாதத்துக்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, கஞ்சா ஏற்றுமதியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதேச மருத்துவத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடிமேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்