சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு: ஜனாதிபதி நியமிப்பு

🕔 November 30, 2021

மையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை முன்வைக்க விசேட குழுவொன்றினை ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகேவின் தலைமையில் 8 பேரடங்கிய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி சில்வா, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி.டபிள்யூ. ஜயதிலக்க, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயண் சிறிமுத்து, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுதர்ஷன சோமசிறி மற்றும் இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்வதுடன், தற்போதுள்ள ஆய்வுகள், பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து – இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்படி குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்