நெல் சந்தைப்படுத்தும் சபைத் தலைவர் ராஜிநாமா

🕔 September 15, 2021

நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கலாநிதி ஜே.டி. மன்னப்பெரும தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இடம் அவர் கையளித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தமது பதவியை ராஜினாமா செய்த அரசு நிறுவனங்களின் இரண்டாவது தலைவர் இவராவார்.

கடந்த வாரம், தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பார் இஷினி விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விக்கிரமசிங்கவும் தனிப்பட்ட காரணங்களை கூறி பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்