ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல்

🕔 July 26, 2021

ஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறை அவமதிப்புக் குற்றத்துக்காக ரஞ்சன் – சிறைத்தண்டனை பெற்றதையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தை காலி செய்யுமாறு நாடாளுமன்றம் அறிவித்திருந்தது.

குறித்த இல்லம் மனுஷ நாணயகாரவுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், ரஞ்சன் ராமநாயக்கவின் அலுவலர்கள் அந்த வீட்டைப் பராமரிக்க அனுமதிக்கப்படும் என, அந்த வீட்டுக்கு சென்றிருந்த மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

மேலும் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை, அந்த வீட்டில் ரஞ்சன் ராமநாயக்கவை விருந்தினராகத் தங்க அனுமதிக்கப் போவதாகவும் மனுஷ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்