ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி குறித்து, அமைச்சர் சரத் வீசசேகர தகவல்

🕔 April 6, 2021

ஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக தற்போது விளக்கமறியலில் உள்ள நௌபர் மௌலவி இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் காசிம் என்பவர் 2016 ஆம் ஆண்டே அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவருக்கு நௌபர் மௌலவி என்பவரே கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்