சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது
அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது,
மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து இலங்கை வந்தவர் எனவும், அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.