இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

🕔 March 11, 2021

ரிந்த நிலையில் தீப்பிடித்த காருக்குள் நேற்று இரவு கொஹுவலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொழிலதிபர், கொஹுவலை – பாத்தியா மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

33 வயதான மேற்படி நபர் இரவு உணவைப் பெறுவதற்காக வெளியில் வந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு வீடு திரும்பும் போது கார் தீப்பிடித்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்