கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம்

🕔 December 10, 2020

பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா

க்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலமுனையிலுள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய நேற்றிரவு பொலிஸ் உத்தியோகத்தர் சென்றுள்ளார். இதன்போது இடம்பெற்ற வாக்குவாதத்தில் அவரது உறவினர் ஒருவரே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். 

நன்றி: தமிழ் மிரர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்