சுதர்ஷினிக்கு மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பு

🕔 November 30, 2020

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பை இன்று திங்கட்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன்படி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சராக அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே ஒரு விசேட வைத்திய நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்