றிசாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 November 13, 2020

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை அவர் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடம்பெயர்ந்த நபர்களை வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி அழைத்துச் சென்றதாக றிசாத் பதியுதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்