பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

🕔 October 27, 2020

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இஸ்லாமிய மதரஸா ஒன்றில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 109 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிவாசல் ஒன்றில் இந்த மதரஸா இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேறுபட்ட வயதுப் பிரிவை சேர்ந்த பிள்ளைகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பெஷாவர் நகரம், சமீபத்திய ஆண்டுகளில் தலிபான் கிளர்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறைகளில் சில மோசமான சம்பவங்களைச் சந்தித்தது.

ஆறாண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள ராணுவக் கல்லூரி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பல்வேறு குழந்தைகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

எனினும், சமீபத்திய ஆண்டுகளில் பெஷாவரில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்