வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

🕔 November 3, 2015

SEUSL - 012ட மாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை புதன்கிழமை, கவன ஈர்ப்பு ஒன்றுகூடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

பல்கலைக்கழ முன்றலில் இடம்பெறும் இந்த ஒன்றுகூடலை, தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து, பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்;

வட மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டுகளில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள், தற்போது ஐ.நா. வின் அனுசரணையோடு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை பொறிமுறையில் உட்படுத்தப்படாமை எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2002 மற்றும் 2009 காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக இவ் விசாரணைக்குழு கவனம் செலுத்துகின்றது. ஆனால் 1990 களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பாக எவ்வித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளமை துர்ப்பாக்கிய நிலையாகும்.

இவ்விடயம் தொடர்பாக நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ள இலங்கை அரசையும், ஐ.நா. அமைப்பையும் ஆவண செய்யுமாறு வலியுறுத்தி, புதன்கிழமை காலை 9.00 மணியிலிருந்து
நண்பகல் 12.30 மணிவரை, தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வினை நடத்த இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்