வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது

🕔 August 3, 2020

லது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரகசியத் தன்மையை பேணி வலதுகுறைந்தோர் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என, வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த நடைமுறை ஏற்பாடாகியுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் நாளையும் (04) நாளை மறுதினமும் (05) தபால் அலுவலகங்களில் அதனை பெற முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபாலகங்களுக்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்