ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்

🕔 June 22, 2020

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனுவை ஜூலை மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணை செய்ய தீர்மானிக்கபட்டுள்ளதுடன், மனுவின் பிரதிவாதிகளான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மற்றும் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு அழைப்பானைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும் 99 அங்கத்தவர்களை, கட்சி உறுப்புரிமையிலிருந்து ஐ.தே.கட்சி நீக்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்