கொரோனா பரவினாலும், தேர்தல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
கொரோனா தொற்று நாட்டில் மீண்டும் பரவினாலும் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா பவரல் ஏற்பட்டாலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு பதிலாக தொகுதிவாரியாக வாக்கெடுப்பை முன்கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முறை தேர்தலின்போது 12ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 01 கோடியே 62 லட்சம் பேர் இம்முறை வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.