மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய பகுதியில்

🕔 October 29, 2015

Mahinda - deniyaya - 02
ஹிந்த ராஜபக்சவினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய, நாதகல தோட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல், மணல், சீமெந்து ஆகிய பொருட்களை இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணிப்பதற்காக தெனியாய, நாதகல தோட்டத்திற்கு மகநெகும திட்டத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவு முறை சகோதரியான விசித்ரா ஷிலாதரி ராஜபக்சவின் பெயரில் நாதகல தோட்டம் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் விஸ்தீரணம் 400 ஏக்கராகும்.

இந்த தோட்டத்திற்கு செல்வதற்காக கொங்க்ரீடினால் நிர்மாணிக்கப்பட்ட பாதை இருந்த போதிலும், புதிய பாதை ஒன்று தெனியாய, நாதகல தோட்ட மாளிகைக்கு செல்வதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி மூன்று ஊடகவியலாளர்கள் மாளிகை நிர்மாணிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சென்ற சந்தர்ப்பத்தில், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பம் வரையில் நிலக்கீழ் மாளிகையின் இரண்டு மாடிகளின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

04 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் அதி நவீன தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த நிலக்கீழ் மாளிகையின் கடைசி பகுதியில் ஆடம்பர வீடொன்றிற்கான சுரங்கப்பாதைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 180 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, இங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வசதிகளையும் கொண்ட மாளிகையில் மேலதிகமான ஹெலிகாப்டர் இறங்கும் தளமும் நிர்மாணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிர்மாணிப்பு தொடர்பில் 2009ஆம் ஆண்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் இறங்கும் முற்றத்தை தவிர ஏனைய அனைத்து, கட்டுமான நடவடிக்கைகளம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியில் மாளிகையொன்று கண்டு பிடிக்கப்பட் நிலையில்,  அம்மாளிகையை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைத்ததாக மஹிந்த தெரிவித்திருந்தார்.

இதேவே, அவ்வாறான நிலக்கீழ் மாளிகையொன்று அலரி மாளிகையில் உள்ளதாகவும் அபயராமையில் வைத்து மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்