மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

🕔 May 6, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் புதல்வர் விதுர காசியப்ப தேசப்பிரிய இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளார்.

இவர் அயர்லாந்தில் பட்டப்பின்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார்.

இலங்கைக்கு வருகை தந்த அவர் – தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் கல்வி கற்கும் அவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு, ஜனாதிபதியின் உதவியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பெற்றுக்கொண்டதாகவும், இந்த செயல் பாரபட்சமானது எனவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்