கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, முன்னைய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், முன்னைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் இணைந்து விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்திருந்த நிலையிலேயே, முன்னைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் ஒன்று கலைக்கப்பட்டு 03 மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
கடந்த மார்ச் 03ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.