15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது

🕔 March 31, 2020

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் புதிய கருவியை அவுஸ்ரேலியா கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கருவியினை கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த கருவி மூலம் இலகுவாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இதற்கமைய ஒரு துளி இரத்தத்தினை சோதனைக்குட்படுத்துவதன் மூலம் 15 நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கின்றதா இல்லையா என்பதனை கண்டறிந்து விடலாம் என அவர் தெரிவித்துள்ளதோடு, மூக்கின் உட்புறங்களில் காணப்படும் சளி படலங்களை கொண்டும் பரிசோதனை செய்ய முடியும் என கூறியுள்ளார்.

சளிபடலங்களை கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டால் 45 நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றதா இல்லையா என்பதனை அறிவித்து விடலாம் எனவும் தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை அறிந்து கொள்வதற்கு சுமார் 14 நாட்கள் தேவைப்படுகின்ற நிலையில், குறித்த கருவியின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்