கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை

🕔 March 20, 2020

றிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீ போன்று கொரோனா வைரஸ் பரவக்கூடியதெனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும் அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேரழிவு நிலைக்கு பதிலளிக்க, சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தையும் குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார பேரழிவு நிலைமையில் இருந்து உடனடியாக விலகிச்செல்வதுடன் நிலைமையை சமாளிக்க போதிய தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளத் தவறிய நாடுகளுக்கு உதவ வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர G – 20 நாடுகளிடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்