குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், மஹிந்த கையொப்பமிட்டார்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை கையொப்பமிட்டார்.
விஜேராம வீட்டில் வைத்து அவர் இன்று புதன்கிழமை குறித்த வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.