ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து நீக்கம்

🕔 January 30, 2020

க்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார.

இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றபோதே இந்த இருவரும் நீக்கப்பட்டதாக சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோரின் உறுப்புரிமைகள் நீக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இருவரை தவிர ஏனைய பழைய உறுப்பினர்கள் புதிய செயற்குழுவுக்கு நியமிக்கப்படுவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்