ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் வாக்கு மூலம் வழங்கினார்

🕔 January 29, 2020

ஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை ரணிலிடமிருந்து இந்த வக்கு மூலம் பெறப்பட்டது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலங்களைப் பெற்றிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் குற்றச் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலம் பெறவுள்ளதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜனரல் நீதிமன்றில் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்